வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பிடிபட்டது


வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பிடிபட்டது
x
தினத்தந்தி 21 March 2021 5:36 PM GMT (Updated: 21 March 2021 5:36 PM GMT)

திருவாடானையில் வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பிடிபட்டது

தொண்டி, 
திருவாடானை தாலுகா கட்டிவயல் விலக்கு சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி ராமசாமி தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பாண்டுகுடி செந்தில்நாதன் என்பவரை சோதனையிட்டதில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ரூ. 3 லட்சத்தை கைப்பற்றிய பறக்கும் படையினர் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகனிடம் ஒப்படைத்தனர்.

Next Story