சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள்


சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள்
x
தினத்தந்தி 21 March 2021 6:24 PM GMT (Updated: 21 March 2021 6:24 PM GMT)

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சிவகங்கை,

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை

நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளையும் கண்காணிக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் எச்.எஸ்.சோனாவனே, முத்துகிருஷ்ணன் சங்கரநாராணயணன் ஆகிய 2 பொது பார்வையாளர்களும், ராகேஷ் படாடியா, வனஸ்ரீ ஹீள்ளன்னவா ஆகிய 2 செலவின பார்வையாளர்களும் போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ்.அதிகாரி லிரெமோ சோபோ லோதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் 5 பேரும் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துவிட்டனர்.
5 பார்வையாளர்களும் சட்டமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர்.
ஏற்பாடுகள் தயார்
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலையொட்டி, ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக தேவையான சக்கரநாற்காலி மற்றும் சாய்தளம், குடிநீர் வசதி உள்பட அத்தியாவசிய தேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story