குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2021 9:39 PM GMT (Updated: 21 March 2021 9:39 PM GMT)

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி கார்த்திகா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கார்த்திகா சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story