விஷம் தின்று பெண் தற்கொலை


விஷம் தின்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 30 March 2021 8:02 PM GMT (Updated: 30 March 2021 8:02 PM GMT)

பெண் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மனைவி கனகம் (வயது 48). குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த கனகம், சம்பவத்தன்று எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story