மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 April 2021 2:03 PM GMT (Updated: 1 April 2021 2:03 PM GMT)

வடமதுரை அருகே சொகுசுபஸ் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திண்டுக்கல்:

பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த கொசவபட்டி அருகே உள்ள ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 24). 

கரூர் மாவட்டம் சின்னவாங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (23). கூலித்தொழிலாளிகள்.

நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் எரியோட்டில் இருந்து வடமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

மோட்டார் சைக்கிளை பிரபு ஓட்டினார். பின்னால் வடிவேல் அமர்ந்து இருந்தார்.

வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி பிரிவு அருகே, திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

 அப்போது அந்த வழியாக ேபாடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி 
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வடிவேல், பிரபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் இறந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சொகுசு பஸ்சை ஓட்டிய தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் (29) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story