முத்தாலம்மன் கோவில் திருவிழா


முத்தாலம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 1 April 2021 2:21 PM GMT (Updated: 1 April 2021 2:21 PM GMT)

நத்தம் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

நத்தம்:

நத்தம் அருகே உள்ள ஊராளிபட்டியில், மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. 

இதையொட்டி முதல் நாள் இரவு தீவட்டி பரிவாரம் மற்றும் வானவேடிக்கைகளுடன், ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு அம்மன் வந்தடைந்தது.

பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் பால்குடம், அக்னிசட்டி, மாவிளக்கு ஆகியவற்றை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் நேற்று மாலையில் வர்ணக்குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story