நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 April 2021 6:44 PM GMT (Updated: 1 April 2021 6:44 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 12,110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. 
அதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,131 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 13 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
சிகிச்சை
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 111 பேர் பலியாகி இருந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 11,866 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 154 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
======

Next Story