காரிமங்கலம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை


காரிமங்கலம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2021 7:10 PM GMT (Updated: 1 April 2021 7:13 PM GMT)

காரிமங்கலம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே உள்ள கொட்டுமாரனஅள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. 
இதனிடையே சத்யாவுக்கும், கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்யா நேற்று காலை உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
பரிதாப சாவு
இதில் உடல் கருகிய அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார். சத்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story