ஆலங்குடியில் ரூ.1½ லட்சம் பறிமுதல்


ஆலங்குடியில் ரூ.1½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2021 1:02 AM IST (Updated: 2 April 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடியில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலங்குடி,ஏப்.2-
ஆலங்குடி தொகுதி தேர்தல் கூடுதல் கண்காணிப்பு நிலை அதிகாரி  சக்தி தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஜஹாங்கீர் என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், அதில் ரூ. 1 லட்சத்து 43 ஆயிரம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆலங்குடி தேர்தல் நடத்தும் அதிகாரி, அக்பர் அலி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பொன்மலர் ஆகியோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

1 More update

Next Story