போலி நகைகளை அடகு வைக்க முயன்றவர் கைது

x
தினத்தந்தி 2 April 2021 1:08 AM IST (Updated: 2 April 2021 1:08 AM IST)
போலி நகைகளை அடகு வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்
மதுரை,
மதுரை தல்லாகுளம் விநாயகர் நகரில் இயங்கி வரும் வங்கிக்கு வந்த ஒருவர் தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் என கூறி உள்ளார். அவர் கொண்டு வந்த நகைகளை நகை மதிப்பீட்டாளர் சோதனை செய்தபோது அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகத்தினர், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், போலி நகைகளை அடகு வைக்க வந்தவர் மேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 43) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 26 கிராம் கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





