தொழிற்சாலை ஊழியர், வாகனம் மோதி பலி

x
தினத்தந்தி 2 April 2021 1:47 AM IST (Updated: 2 April 2021 1:47 AM IST)
தொழிற்சாலை ஊழியர், வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமாத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 37). தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்த இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்குரோடு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





