சேலம் மாவட்டத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 April 2021 12:11 AM GMT (Updated: 2 April 2021 12:11 AM GMT)

51 பேருக்கு கொரோனா தொற்று

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 50 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 51 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 539 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 49 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 306 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story