அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் படுகாயம்


அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 April 2021 12:57 AM IST (Updated: 7 April 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் படுகாயம் அடைந்தனர்

சிவகங்கை
மதுரையில் இருந்து தொண்டி நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சிவகங்கை பைபாஸ் சாலையில் சென்ற போது திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பாகம் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story