டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு


டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 6 April 2021 7:57 PM GMT (Updated: 6 April 2021 7:57 PM GMT)

திருக்குறுங்குடி அருகே டிரைவரை மிரட்டி பணம் பறித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர்வாடி, ஏப்:
திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பிதலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் மாணிக்கராஜா (வயது 28). ஜீப் டிரைவர். சம்பவத்தன்று இவர் ஏர்வாடி கைகாட்டி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தளவாய்புரம் காலனியை சேர்ந்த முத்துக்குமார் என்ற ஷில்பா குமார், மாணிக்கராஜாவிடம் மது அருந்த ரூ.200 கேட்டார். அதற்கு அவர் மறுத்தார். இதையடுத்து முத்துக்குமார் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ.200-ஐ பறித்தார். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story