குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலைக்குமுயன்ற சம்பவம்

பல்லடம் அருகே குடும்பத் தகராறு காரணமாக குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம், ஏப்.7-
பல்லடம் அருகே குடும்பத் தகராறு காரணமாக குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது
பனியன் நிறுவன தொழிலாளி
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி(வயது 24). இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது. கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் நேற்றும் தகராறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து காலையில் இசக்கி ராஜா வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் செல்வியும், அவருடைய குழந்தையும் வீ்ட்டில் இருந்தனர். வழக்கம்போல் மாலையில் பால்காரர் ஒருவர் பால் ஊற்ற இசக்கிராஜா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் வாயில் நுரைதள்ளி மயங்கிய நிலையில் தாயும், மகனும் கிடந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பால்காரர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
குழந்தை சாவு
உடனே போலீசார் விரைந்து வந்து செல்வியையும், அவருடைய குழந்தையையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை ரித்திசை பரிசோதனை செய்த டாக்டர்டர்கள். குழந்தை ரித்திஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் செல்வி தனது குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் குழந்தை இறந்து விட்டது. செல்விக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story