கோத்தகிரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


கோத்தகிரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 8 April 2021 2:23 PM GMT (Updated: 8 April 2021 2:23 PM GMT)

கோத்தகிரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோத்தகிரி

நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதாஅடங்கிய குழுவினர் கோத்தகிரி நகரில் திடீர் ோதனை மேற்கொண்டனர். 

இதில் முகக்கவசம் அணியாமல் சென்ற 14 பேருக்கு தலா 200 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.2,800 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


Next Story