ஓசூரில் முதியவர் தற்கொலை


ஓசூரில் முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2021 5:55 PM GMT (Updated: 8 April 2021 6:45 PM GMT)

ஓசூரில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்,

ஓசூர் அருகே பேடரப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோபாலப்பா (வயது 65). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோபாலப்பா இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story