திட்டச்சேரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


திட்டச்சேரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 April 2021 5:08 PM GMT (Updated: 12 April 2021 5:08 PM GMT)

திட்டச்சேரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே வாழ்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாரதிமோகன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 21). தொழிலாளி. இவருக்கும் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபாகரன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.

கைது

இந்த நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறிந்த பெற்றோர் இது குறித்து அவளிடம் கேட்டனர். அப்போது பிரபாகரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை பெற்றோரிடம் சிறுமி கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story