வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது


வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 April 2021 1:54 PM GMT (Updated: 14 April 2021 1:54 PM GMT)

வீட்டுக்குள் நாய் நுழைந்ததால் தகராறு: பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்குதல் 2 பேர் கைது.

திருமக்கோட்டை, 

திருமக்கோட்டை கடைத்தெருவில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் வடிவேலு(வயது52). இவர் புதுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கலியபெருமாள்(60), தென்னரசு(40), பஞ்சநாதன்(50). சம்பவத்தன்று தென்னரசு வீட்டில் வளர்க்கும் நாய் வடிவேலு வீட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் வடிவேலுவை பஞ்சநாதன், கலியபெருமாள், தென்னரசு, செல்வவிநாயகம் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த வடிவேலு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னரசு, கலியபெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பஞ்சநாதன், செல்வநாயகம் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை திருமக்கோட்டை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story