கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 14 April 2021 5:32 PM GMT (Updated: 14 April 2021 5:32 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

வேப்பந்தட்டை, ஏப்.15-
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த அரும்பாவூரில் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் முக கவசம் அணிந்து செல்வது, வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Next Story