கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் சாவு


கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 15 April 2021 5:38 PM GMT (Updated: 15 April 2021 5:38 PM GMT)

கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

கரூர்
கொத்தனார்
கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). கொத்தனாரான இவருக்கு, திருமணமாகி வனஜா (21) என்ற மனைவியும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் பிரசாந்த்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் வனஜா தனது வீட்டில் எறும்பிற்காக பொடியை (விஷம்) தண்ணீரில் கலந்து வைத்திருந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரசாந்த், மது என நினைத்து எறும்பிற்கு கலந்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தார். பின்னர், சிறிது நேரத்தில் வீட்டினுள் அவர் மயங்கி விழுந்தார்.
சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் பிரசாந்த்தை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story