வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் அலுவலர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 15 April 2021 11:25 PM IST (Updated: 15 April 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

கரூர்
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்தது. இதையடுத்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த பணிகளை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 More update

Next Story