தர்மபுரி: ரெயில் மோதி தொழிலாளி பலி

x
தினத்தந்தி 15 April 2021 11:41 PM IST (Updated: 15 April 2021 11:41 PM IST)
ரெயில் மோதி தொழிலாளி பலி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த காந்தி (வயது 34) என தெரியவந்தது. தொழிலாளியான அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக ரெயில் மோதி இறந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





