45 பேருக்கு கொரோனா


45 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 April 2021 5:33 PM GMT (Updated: 16 April 2021 5:33 PM GMT)

45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 45 பேருக்கு கொேரானா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுத்தனிமை மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 445 பேர் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 32 பேர் நேற்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

Next Story