கஞ்சாவுடன் வாலிபர் கைது


கஞ்சாவுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 April 2021 3:42 PM GMT (Updated: 19 April 2021 3:42 PM GMT)

கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் வெளிப் பட்டிணம் செட்டிய தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் விற்பனைக்காக வைத் திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்ததை கண்டு பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் மதன் குமார் (வயது22) என்பதை அறிந்து அவரை கைது செய்தனர்.

Next Story