விஷம் தின்ற மாற்றுத்திறனாளி பெண் சாவு

விஷம் தின்ற மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்தார்.
உப்பிலியபுரம்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிக்கத்தம்பூர் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(வயது 65). இவரது மகள் சத்யா(45). மாற்றுத்திறனாளியான சத்யாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்கள் ராஜேஸ்வரியின் மகன் பிரபுவுடன் வசித்து வந்தனர். சமீப நாட்களாக ராஜேஸ்வரி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தாயுடன், சத்யா எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி சத்யா உயிரிழந்தார். ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிக்கத்தம்பூர் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(வயது 65). இவரது மகள் சத்யா(45). மாற்றுத்திறனாளியான சத்யாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்கள் ராஜேஸ்வரியின் மகன் பிரபுவுடன் வசித்து வந்தனர். சமீப நாட்களாக ராஜேஸ்வரி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தாயுடன், சத்யா எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி சத்யா உயிரிழந்தார். ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story