ஆசிரியையிடம் தாலி சங்கிலியை பறித்த வாலிபர்

காரைக்குடியில் ஆசிரியையிடம் 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியை கண்காணிப்பு கேமரா காட்சி உதவியால் போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி,
காரைக்குடியில் ஆசிரியையிடம் 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியை கண்காணிப்பு கேமரா காட்சி உதவியால் போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
நெசவாளர் காலனி அருகே வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் நல்லம்மை கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டான். இதுகுறித்து நல்லம்மை குன்றக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணையில் இறங்கினார்.
கண்காணிப்பு கேமரா
அப்போது அந்த ரக மோட்டார் சைக்கிள் இதுவரை ஒன்று மட்டுமே விற்பனையாகியுள்ளது எனக்கூறி அதனை வாங்கியவரின் முகவரியை டீலர் கொடுத்துள்ளார். கொரட்டி என்ற கிராமத்தில் உள்ளஅம்முகவரியில் வசித்து வந்த, சமீபத்தில் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு வந்துள்ள கலைதாஸ் (வயது 25) என்பவரை போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். உடனே போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
கைது
Related Tags :
Next Story