சென்னையில் கொரோனா பாதிப்பால் போலீஸ் ஏட்டு பலி உருவப்படத்துக்கு கமிஷனர் அஞ்சலி


சென்னையில் கொரோனா பாதிப்பால் போலீஸ் ஏட்டு பலி உருவப்படத்துக்கு கமிஷனர் அஞ்சலி
x
தினத்தந்தி 24 April 2021 2:33 AM GMT (Updated: 24 April 2021 2:33 AM GMT)

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சென்னை, 

சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவு ஏட்டாக வேலை செய்தவர் கருணாநிதி (வயது 48). இவர், கடந்த 14-ந் தேதி வயிற்றுவலி காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு ஏற்கனவே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியாகி உள்ளார். ஏட்டு கருணாநிதி 2-வதாக இறந்துள்ளார். அவர் குடும்பத்துடன் சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் போலீஸ் குடியிருப்பில் வசித்தார். அவருடைய மனைவி பெயர் சுந்தரவள்ளி (42). இவர்களின் ஒரே மகன் சாய்கிஷோர். அவர் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

கொரோனா பாதிப்பால் பலியான ஏட்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று மாலை மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story