கடத்தல் மணலை அப்புறப்படுத்திய பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்


கடத்தல் மணலை அப்புறப்படுத்திய பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 24 April 2021 6:07 PM GMT (Updated: 24 April 2021 6:07 PM GMT)

மீமிசல் அருகே கடத்தல் மணலை அப்புறப்படுத்திய பொக்லைன் எந்திர ஆபரேட்டரை தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோட்டைப்பட்டினம், ஏப்.25-
மீமிசல் அருகே கடத்தல் மணலை அப்புறப்படுத்திய பொக்லைன் எந்திர ஆபரேட்டரை தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மணல் கடத்தல்
மீமிசல் அருகே உள்ள ஆலத்தூரில் உள்ள ஆற்றில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் மீமிசல் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக ஒரு லாரி வேகமாக வந்தது. அதிகாரிகளை பார்த்ததும் அதன் டிரைவர் மணலை நடுரோட்டில் கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து அதிகாரிகள் சாலையில் கிடந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தனர்.
தாக்குதல்
அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் நடுரோட்டில் கொட்டப்பட்ட மணல் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது திடீரென்று, அங்கு வந்த மர்ம கும்பல் கற்களால் பொக்லைன் எந்திரத்தை தாக்கினர்.
மேலும் பொக்லைன் ஆபரேட்டர் சத்தியமதன் (வயது 22) என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் அங்கு சென்றவுடன் அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
 இது குறித்து மீமிசல் கிராமநிர்வாக அதிகாரி பிரபு கொடுத்த புகாரின் பேரில் மணல் கடத்திய ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆத்மநாதன் மகன் முருகேசன் என்பவர் மீது மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வலைவீச்சு
மேலும் பொக்லைன் எந்திர ஆபரேட்டர் சத்தியமதன் காடுத்த புகாரின் பேரில் திருப்புனவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story