விபத்தில் முதியவர் பலி
விபத்தில் முதியவர் பலி
கோவை
கோவை கணபதிபுதூர் தாரணி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காந்திபுரம் 100 அடி ரோடு 7-வது வீதி சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மொபட் ராதாகிருஷ்ணன் சென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை மத்திய போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story