வானூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது


வானூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 1 May 2021 5:03 PM GMT (Updated: 1 May 2021 5:03 PM GMT)

வானூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம், 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தாலுகா துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் குரிஷ் மகன் பிரதாப்ராஜ் (வயது 20). ரவுடியான இவர் மீது விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு வழிப்பறி சம்பவம் தொடர்பாக பிரதாப்ராஜை வானூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் பிரதாப்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.
இதையடுத்து பிரதாப்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story