ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி சாவு


ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
x
தினத்தந்தி 1 May 2021 8:20 PM GMT (Updated: 1 May 2021 8:20 PM GMT)

உடையார்பாளையம் அருகே தோழிகளுடன் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

உடையார்பாளையம்:

மாணவி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த மேலமைக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 32). இவர் கோயம்புத்தூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் பாவனா(13). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த வாரம் சொந்த ஊரான மேலமைக்கால்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். அப்போது ஏரியில் அவர் தடுமாறி விழுந்து நீரில் மூழ்கினார்.
சாவு
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டனர். மேலும் மயங்கிய நிலையில் இருந்த அவரை, ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாவனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story