382 பேருக்கு கொரோனா


382 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 May 2021 8:27 PM GMT (Updated: 2 May 2021 8:27 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.
382 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
2 பேர் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று ஒரே நாளில் 412 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 134 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், திருப்பூரை சேர்ந்த 78 வயது ஆண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பலியானார். இதுபோல் 58 வயது பெண் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். தற்போது 241 பேர் இதுவரை சிகிச்சை பலன் இன்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Next Story