மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தற்கொலை


மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தற்கொலை
x
தினத்தந்தி 2 May 2021 8:47 PM GMT (Updated: 2 May 2021 8:47 PM GMT)

ஆரல்வாய்மொழியில் மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

மூதாட்டி

ஆரல்வாய்மொழி அற்புதம்நகரை சேர்ந்தவர் மேரி (வயது 60). இவர் கணவரை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்தார். அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதிக்கும் மாமியார் மேரிக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேரி மனமுடைந்து காணப்பட்டார். 
நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர். நேற்று காலையில் மருமகள் புஷ்பரதி கோழி கூண்டை திறக்க வீட்டின் பின்பக்கம் சென்றார். 

தற்கொலை

அப்போது மேரி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.
 இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மருமகளுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story