தலையில் கல்லைப்போட்டு முதியவர் படுகொலை


தலையில் கல்லைப்போட்டு முதியவர் படுகொலை
x
தினத்தந்தி 6 May 2021 11:08 PM GMT (Updated: 6 May 2021 11:08 PM GMT)

ஈரோட்டில், தலையில் கல்லைப்போட்டு முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஈரோடு
ஈரோட்டில், தலையில் கல்லைப்போட்டு முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.
ரத்த வெள்ளத்தில்...
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட டி.வி.எஸ். வீதியில் நேற்று காலை 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். இதைப்பார்த்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் இதுபற்றி ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கெடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லைப்போட்டு முதியவர் படுகொலை
இறந்தவரின் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. மேலும் இறந்த முதியவரின் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. இதனால் நள்ளிரவில் யாரோ மர்ம நபர் கல்லால் அடித்து முதியவரை படுகொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது ஒருவர் கல்லை எடுத்து கீழே போட்டது போன்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது.
விசாரணை
ஆனால் அவருடைய முகம் சரியாக தெரியவில்லை. இதனால் கொலையாளியை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு இறந்தவர் யார்? அவரை யார் கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story