இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 9 May 2021 1:07 AM IST (Updated: 9 May 2021 1:07 AM IST)
திசையன்விளை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள காரம்பாடு கே.கே.நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 21). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக புவனேஸ்வரி கோபித்துக் கொண்டு உவரி அருகே தத்துவநேரியில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புவனேஸ்வரிக்கு திருமணம் முடிந்து 3 வருடங்களே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





