அரியலூரில் புதிதாக 105 பேருக்கு தொற்று


அரியலூரில் புதிதாக 105 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 May 2021 7:52 PM GMT (Updated: 8 May 2021 7:52 PM GMT)

அரியலூரில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,202 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 5,666 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 483 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story