கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து தொழிலாளி சாவு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 39). கூலித்தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி நீலா (30) என்ற மனைவி உள்ளார். கடந்த 11-ந்தேதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து முத்து, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர்
சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story