கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 365 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 365 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 16 ஆயிரத்து 500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1,200 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 365 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 500-ல் இருந்து 16 ஆயிரத்து 865-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 541 பேர் கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story