திருச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு


திருச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 May 2021 8:07 PM GMT (Updated: 19 May 2021 8:07 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,459 பேருக்கு தொற்று உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு
ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு
பாதிப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது
திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,459 பேருக்கு தொற்று உறுதியானது.

41 ஆயிரத்தை தாண்டியது

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,459 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 41,272 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 9,602 பேர் உள்ளனர். 396 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 31,289 ஆகும்.

13 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார், அரசு ஆஸ்பத்திரி மற்றும் பொன்மலை ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 88 மற்றும் 75 வயதுடைய 2 மூதாட்டிகள், 84, 75, 74, 72, 67, 65, 63, 62, 61, 57, 54, வயதுடைய 11ஆண்கள் என 13 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 381ஆக உயர்ந்தது.

385 படுக்கைகள் காலி

திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 17 படுக்கைகள், சாதரண படுக்கைகள் 244 மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 124 என மொத்தம் 385 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story