அரியலூரில் ஒரே நாளில் 267 பேருக்கு தொற்று


அரியலூரில் ஒரே நாளில் 267 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 20 May 2021 8:24 PM GMT (Updated: 20 May 2021 8:24 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 267 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:

267 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சி பகுதியில் 29 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 20 பேரும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 38 பேரும், திருமானூர் ஒன்றிய பகுதியில் 24 பேரும், செந்துறை ஒன்றிய பகுதியில் 25 பேரும், தா.பழூர் ஒன்றிய பகுதியில் 29 பேரும், ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் 41 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதியில் 60 பேரும், வெளிமாவட்டத்தில் இருந்து வசிப்பவர்களில் ஒருவருக்கும் என மொத்தம் 267 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,476 ஆக உயர்ந்துள்ளது. இதில் 64 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 6,654 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 1,758 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 46 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,313 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 327 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 120 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 497 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story