கார் மோதி ஒருவர் பலி

x
தினத்தந்தி 28 May 2021 2:02 AM IST (Updated: 28 May 2021 2:02 AM IST)
கார் மோதி ஒருவர் பலி
நாகமலைபுதுக்கோட்டை
திருமங்கலம் கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மாரிக்கண்ணன்(வயது 23). இவரும், இதே ஊரைச் சேர்ந்த குபேந்திரன் (48) என்பவரும் சமயநல்லூரில் இருந்து திருமங்கலம் நோக்கி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். மாரிக்கண்ணன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றார். துவரிமான் சந்திப்பு அருகே சென்றபோது கோச்சடையில் இருந்து வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி குபேந்திரன் இறந்தார். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





