பாம்பு கடித்து பெண் சாவு


பாம்பு கடித்து பெண் சாவு
x
தினத்தந்தி 30 May 2021 1:59 AM IST (Updated: 30 May 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே பாம்பு கடித்து பெண் பலியானார்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கருப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருடைய மனைவி இந்திரா(வயது 48). இவர் அருகில் உள்ள கணேசபுரம் தனியார் தோட்டத்தில் புல் அறுக்கச் சென்றார். அப்போது இந்திராவை பாம்பு கடித்து விட்டது உடனே அவரை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் இறந்தார். இதுகுறித்து சோழவந்தான் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story