சேலம் சத்திரம் ரெயில் நிலையத்துக்கு சரக்கு ரெயிலில் 1,240 டன் உரம் வந்தது


சேலம் சத்திரம் ரெயில் நிலையத்துக்கு சரக்கு ரெயிலில் 1,240 டன் உரம் வந்தது
x
தினத்தந்தி 30 May 2021 12:01 AM GMT (Updated: 30 May 2021 12:01 AM GMT)

சரக்கு ரெயிலில் 1,240 டன் உரம் வந்தது

சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள சத்திரம் ரெயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து உணவு தானிய பொருட்களும், சிமெண்டு, உரம் உள்ளிட்டவைகளும் சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,240 டன் உரம் சேலம் சத்திரம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி மாவட்டத்தில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story