கஞ்சா விற்றவர் சிக்கினார்


கஞ்சா விற்றவர் சிக்கினார்
x
தினத்தந்தி 2 Jun 2021 1:29 AM IST (Updated: 2 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்றவர் சிக்கினார்

மதுரை
மதுரை அண்ணாநகர் போலீசார் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரை பிடித்து விசாரித்த போது உசிலம்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 48) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
1 More update

Next Story