பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பு பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு


பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பு பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 9:42 PM GMT (Updated: 1 Jun 2021 9:42 PM GMT)

பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர் வரத்து ஆதாரங்களாக உள்ளது. 
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர் மின் உற்பத்திக்காக அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. 
இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,078 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.43 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக  வினாடிக்கு 1,050 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 
நேற்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2,994 கனஅடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர் வரத்து ஆதாரங்களாக உள்ளது. 
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர் மின் உற்பத்திக்காக அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. 
இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,078 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.43 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக  வினாடிக்கு 1,050 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 
நேற்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2,994 கனஅடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.34 அடியாக இருந்தது. 
அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக வினாடிக்கு 1,050 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக வினாடிக்கு 1,050 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story