மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் ஆசிரியர்கள் வழங்கினர்


மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் ஆசிரியர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 2 Jun 2021 3:28 AM IST (Updated: 2 Jun 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர்கள் உணவுப்பொருட்கள் வழங்கினர்.

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் சார்பில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா கால உணவுப்பொருட்கள் வழங்கி உதவினார்கள். ஆசிரியர் விஜயேந்திரன் தலைமையில் ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, ராமச்சந்திரன், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் உணவு பொருட்களை மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார்கள். முன்னதாக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 More update

Related Tags :
Next Story