சேலம் மாவட்டத்தில் புதிதாக 975 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 25 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 975 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 975 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
975 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 997 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று புதிதாக 975 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 228 பேர், எடப்பாடி, சேலம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா 55 பேர், மேச்சேரியில் 46 பேர், நங்கவள்ளியில் 44 பேர், வீரபாண்டி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 40, ஆத்தூரில் 38 பேர், மேட்டூரில் 33 பேர், பனமரத்துப்பட்டியில் 23 பேர், சங்ககிரியில் 22 பேர், தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 17 பேர், வாழப்பாடியில் 15 பேர், கொங்கணாபுரத்தில் 14 பேர், காடையாம்பட்டி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 12 பேர், மகுடஞ்சாவடியில் 9 பேர், கெங்கவல்லியில் 8 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 7 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
1,062 பேர் டிஸ்சார்ஜ்
கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் வந்த 32 பேர், தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 30 பேர், சென்னை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த 25 பேர், விழுப்புரத்தில் இருந்து வந்த 23 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 22 பேர், திருவள்ளூரில் இருந்து வந்த 15 பேர், திருப்பூர், பெரம்பலூரில் இருந்து வந்த 14 பேர், வேலூரில் இருந்து வந்த 10 பேர், காஞ்சீபுரத்தில் இருந்து வந்த 8 பேர், நீலகிரியில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,062 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். தொடர்ந்து 10 ஆயிரத்து 558 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
25 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் தினமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story