ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,596 பேருக்கு கொரோனா- 5 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,596 பேருக்கு கொரோனா- 5 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2021 3:19 AM IST (Updated: 9 Jun 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 5 பேர் பலியானார்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 5 பேர் பலியானார்கள்.
1,596 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்திலேயே 2-வது இடத்தில் ஈரோடு காணப்படுகிறது. 
நேற்று முன்தினம் 1,646 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டார்கள். நேற்றும் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. ஒரே நாளில் புதிதாக 1,596 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 485 ஆக உயர்ந்தது. இதில் 54 ஆயிரத்து 742 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள்.  நேற்று மட்டும் 2 ஆயிரத்து 3 பேர் குணமடைந்தனர். தற்போது 14 ஆயிரத்து 284 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.
5 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளார்கள். 
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 74 வயது முதியவர் கடந்த மாதம் 6-ந் தேதியும், 55 வயது ஆண் 11-ந் தேதியும், 65 வயது முதியவர் 26-ந் தேதியும், 55 வயது ஆண் கடந்த 5-ந் தேதியும், 65 வயது மூதாட்டி நேற்று முன்தினமும் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 459 ஆக உயர்ந்தது.
1 More update

Next Story