கர்நாடகத்தில் புதிதாக 10,959 பேருக்கு வைரஸ் பாதிப்பு


கர்நாடகத்தில் புதிதாக 10,959 பேருக்கு வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 7:52 PM GMT (Updated: 9 Jun 2021 7:52 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 10,959 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் புதிதாக 10,959 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

20,246 பேர் டிஸ்சார்ஜ்

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 63 ஆயிரத்து 962 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 10,959 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 28 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 192 பேர் உயிரிழந்தனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 291 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 20,246 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 80 ஆயிரத்து 411 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆக குறைந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,395 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

பாகல்கோட்டையில் 96 பேர், பல்லாரியில் 211 பேர், பெலகாவியில் 341 பேர், பெங்களூரு புறநகரில் 385 பேர், பீதரில் 9 பேர், சாம்ராஜ்நகரில் 254 பேர், சிக்பள்ளாப்பூரில் 268 பேர், சிக்கமகளூருவில் 339 பேர், சித்ரதுர்காவில் 200 பேர், தட்சிண கன்னடாவில் 594 பேர், தாவணகெரேயில் 227 பேர், தார்வாரில் 275 பேர், கதக்கில் 95 பேர், ஹாசனில் 745 பேர் கொேரானாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

ஹாவேரியில் 97 பேர், கலபுரகியில் 48 பேர், குடகில் 216 பேர், கோலாரில் 239 பேர், கொப்பலில் 157 பேர், மண்டியாவில் 397 பேர், மைசூருவில் 1,163 பேர், ராய்ச்சூரில் 20 பேர், ராமநகரில் 50 பேர், சிவமொக்காவில் 562 பேர், துமகூருவில் 662 பேர், உடுப்பியில் 413 பேர், உத்தரகன்னடாவில் 312 பேர், விஜயாப்புராவில் 158 பேர், யாதகிரியில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

192 பேர் சாவு

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 50 பேரும், பாகல்கோட்டையில் ஒருவரும், பல்லாரியில் 11 பேரும், பெலகாவியில் 8 பேரும், பெங்களூரு புறநகரில் 8 பேரும், பீதரில் ஒருவரும், சாம்ராஜ்நகரில் 5 பேரும், சிக்பள்ளாப்பூரில் ஒருவரும், 

சிக்கமகளூருவில் 3 பேரும், சித்ரதுர்காவில் ஒருவரும், தட்சிண கன்னடாவில் 3 பேரும், தாவணகெரேயில் 7 பேரும், தார்வாரில் 9 பேரும், கதக்கில் 2 பேரும், ஹாசனில் 8 பேரும், ஹாவேரியில் 12 பேரும் இறந்தனர். 

கோலாரில் 7 பேரும், கொப்பலில் 4 பேரும், மைசூருவில் 22 பேரும், ராய்ச்சூரில் 2 பேரும், ராமநகரில் ஒருவரும், சிவமொக்காவில் 9 பேரும், துமகூருவில் 8 பேரும், உடுப்பியில் 4 பேரும், 

உத்தர கன்னடாவில் 2 பேரும், விஜயாப்புராவில் 3 பேரும் என 192 பேர் இறந்தனர். கலபுரகி, மண்டியா, குடகு, யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story